/* */

அரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 14 வருட இபிஎஃப் கணக்கை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது

HIGHLIGHTS

அரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 14வருட இபிஎஃப் கணக்கு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 14வருட இபிஎஃப் கணக்கு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் ஏ ஐ டி யூ சி சுகாதார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலையிட வலியுறுத்தி தஞ்சாவூர் மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் தொடக்கி வைத்தார். மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் நிறைவு செய்து வைத்து பேசினார்.

கோரிக்கைகளை விளக்கி அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர் பி.முத்துக்குமரன், மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், அரியலூர் மாவட்ட செயலாளர் ரெ.நல்லுச்சாமி, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் பி.செல்வராஜ், அரியலூர் ஏ ஐ டி யூ சி நிர்வாகிகள் ஆர். தனசிங், ஜி. ஆறுமுகம், டி ஜீவா ஆகியோர் உரையாற்றினார்கள்.

நகராட்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், அமிர்தவல்லி, அஞ்சலை, பானுமதி, நாகூரான், விஜி, உஷா, ஆர்.ராணி , ஆறுமுகம் உள்ளிட்ட சுகாதார தொழிலாளர்கள் பங்கேற்றனர். அரியலூர் நகராட்சி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் 14 வருட கணக்கை எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும், அரசாணை 62 இன் படி நிர்ணய ஊதியம் ரூ 15,848 வழங்கிட வேண்டும்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி 31 மாதத்திற்கானத்தை தினக்கூலி சம்பள அரியர்ஸ் பணத்தை திருச்சி மாவட்ட தொழிலாளர் அலுவலர் முன்பு ஒப்புக் கொண்டவாறு அரியலூர் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 27 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும், குறைந்த சம்பளத்தில் ஆள் எடுப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட து.

Updated On: 9 Nov 2023 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை