/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிப் பணிகள்: செய்தியாளர்களுடன் ஆட்சியர் ஆய்வு

தமிழக அரசின் வேளாண் திட்டங்களை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் கேட்டுக் கொண்டார்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிப் பணிகள்: செய்தியாளர்களுடன் ஆட்சியர் ஆய்வு
X

தஞ்சாவூர் ஒன்றியம் குருங்குளம் மேற்கு கிராமம், திருக்கானூர்பட்டி ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் செய்தியாளர் மற்றும் அலுவலர்களுடன் பார்வையிட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் செய்தியாளர்கள் பயணத்தின் போது பார்வையிட்டார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் குருங்குளம் மேற்கு கிராமம், திருக்கானூர்பட்டி ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக்ஜேக்கப் இன்று (28.12.2023) செய்தியாளர் மற்றும் அலுவலர்களுடன் பார்வையிட்டார்கள்.

குருங்குளம் மேற்கு கிராமத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தொகுப்பு-5ல் 12 விவசாயிகளுக்கானநிலத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் பார்வையிட்டார்.

விவசாயிகள் சசிகுமார், செல்வராஜ், சிவகாசி தெரிவித்த போது, வானம் பார்த்த பூமியாக இருந்த எங்கள் நிலத்தில் 24 ஏக்கர் அளவிற்கு 12 விவசாயிகள் பயன் பெறும் வகையில் தமிழக அரசு ரூ.15 இலட்சம் செலவில் மோட்டார் கிணறு அமைத்து தந்ததை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் முந்திரி பயிரிட்டும், உளுந்து பயிரட்டும் வேளாண் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறச் செய்த தமிழ்நாடு முlலமைச்சருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தனர்.

பின்னர், திருக்கானூர்பட்டியில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் மூலமாக சகாயமேரி என்பவரது நிலத்தில்1.43 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1,84,568 கடனுதவியில்ரூ.1,38,313 மானியமாக பெற்று சொட்டுநீர் பாசன திட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்கள்.

அங்கிருந்த விவசாயிகளிடம் வேளாண் துறையில் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு, வேளாண் பணிகளில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் கேட்டுக் கொண்டார்.

பின்னர்மாவட்டஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் செய்தியாளர் பயணத்தின்போது செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் 14 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் சிறப்புஇனமாக சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களை கண்டறிந்து, அதற்கு சொந்தமான விவசாயிகளை குழுவாக அமைத்து, குழுவினை பதிவு செய்து, பங்கு பெரும் விவசாயிகளின் தரிசு நிலங்களில் இருந்த முட்புதற்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டது.

பின்னர் பாசன வசதியை ஏற்படுத்த குழாய் கிணறு அமைக்கப்பட்டு, இலவச மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, மரப்பயிர்கள், பழப்பயிர்கள், பணப்பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வேளாண்மை உழவர்-நலத்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2021-22-ஆம் ஆண்டில் கலைஞர் திட்டத்தில் தரிசு நில தொகுப்புகளாக தஞ்சாவூர் வட்டாரத்தில் 5ம், பூதலூர் வட்டாரத்தில் 7ம், திருவோணம் வட்டாரத்தில் 2ம் ஆக மொத்தம் 14 தொகுப்புகள் 299 ஏக்கரில் செயல்படுத்தப்பட்டது. இதில் ஆதிதிராவிட விவசாயிகள் 28 நபரும், பொது விவசாயிகள் 201 நபரும் ஆக கூடுதல் 229 விவசாயிகள் பயனடைந்தனர். இத்தொகுப்பில் 17 குழாய்கள் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. மின்வசதி மற்றும் சொட்டுநீர் வசதி ஏற்படுத்தி, விவசாயிகள் விரும்பிய பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

2022-23-ஆம் ஆண்டில் 226 பொதுவிவசாயிகளுடன் சிறப்பாக செயல்படுத்துவதற்கு ஏற்ப 19 ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. 2023-24-ஆம் ஆண்டில் கலைஞர் திட்டத்தில் ஒரத்தநாடு வட்டாரத்தில் 5 தரிசு நிலத் தொகுப்புகள் கண்டறியப்பட்டு 67.09 ஏக்கரில் முப்புதர்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக்ஜேக்கப் தெரிவித்தார்கள்.

இந்தசெய்தியாளர் பயணத்தின் போது வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, துணை இயக்குநர்கள் ஈஸ்வர், சுஜாதா, கோமதிதங்கம் (நேர்முகஉதவியாளர்), உதவிஇயக்குநர்.அய்யம்பெருமாள், செய்திமக்கள்தொடர்பு அலுவலர்.ரெ.மதியழகன், வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், தோட்டக்கலை அலுவலர் சோபியா, தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ், உதவிஅலுவலர்கள்ஞானசுந்தர், வெங்கடாஜலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Dec 2023 10:30 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு