Begin typing your search above and press return to search.
இராஜராஜ சோழனின் 1036வது சதய விழா: தஞ்சை பெருவுடையாருக்கு மஹாபிஷேகம்
இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.
HIGHLIGHTS
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036வது சதய விழாவை முன்னிட்டு, பெருவுடையாருக்கு 48 வகையான திரவியங்களைக் கொண்டு மஹாபிஷேகம் நடைபெற்றது.
மாமன்னன் இராஜராஜ சோழனின் 1036 வது சதயவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவினையொட்டி, 12 அடி உயர பெருவுடையாருக்கு சந்தனம், மஞ்சள், தேன், பால், இளநீர், திரவியபொடி, கரும்புச்சாறு உள்ளிட்ட 48 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருவுடையாருக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. மேலும் 10க்கும் மேற்பட்ட ஓதுவார்கள் திருமுறை தேவாரப்பாடல்களை பாட, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் தருமை ஆதினத்தின் தம்பிரான் கட்டளை சுவாமிகள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.