/* */

பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்

பாபநாசம் வட்டாரத்தில் நீர்வள வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பாபநாசம் வட்டாரத்தில்  விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம்
X

பாபநாசம் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாரத்தில் தமிழ்நாடு நீர்வள வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பண்ணைப்பள்ளி பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கோவிந்தநாட்டுசேரி கிராமத்தை சேர்ந்த 25 முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டனர்.

இதில் பாபநாசம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன், துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தசாமி , கபிஸ்தலம் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் பரணிகா, மற்றும் வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த 7 வேளாண்மை இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

விவசாயிகளுக்கு நெல் விதைப்பிலிருந்து அறுவடை வரை உள்ள தொழில்நுட்பங்கள் பற்றி பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் பயிற்சியளித்தார். இந்த பண்ணைப்பள்ளியில் வேளாண்மைக் கல்லூரியை சேர்ந்த வேளாண்மை இளங்கலை இறுதியாண்டு மாணவர்கள் நெல் விதைக்கும் பொழுது வீரியமான விதைகளை கோழி முட்டை கொண்டு தேர்வு செய்யும் முறை (மிதக்கும் முட்டை) பற்றிய செயல்விளக்கம் விவசாயிகளுக்கு செய்து காண்பித்தனர்.

Updated On: 10 Jan 2022 12:40 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!
  4. லைஃப்ஸ்டைல்
    காதலுக்கு எல்லைகளோ, தூரங்களோ கிடையாது !
  5. நாமக்கல்
    கடும் வெப்பத்தால் ரோட்டில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவர் உயிரிழப்பு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
  9. தேனி
    கொதிக்குது தேனி தண்ணீயாவது குடுங்க... இந்து எழுச்சி முன்னணி...
  10. ஆரணி
    ஆரணியில் வெவ்வேறு வழக்கில் மூன்று பெண்கள் உட்பட நான்கு பேருக்கு ஆயுள்...