/* */

உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு 50 சத மானியத்தில் மெட்டாரைஸ்யம் பச்சை பூஞ்சாளம்

ஆலத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு 50 சத மானியத்தில் மெட்டாரைஸ்யம் பச்சை பூஞ்சாளம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு 50 சத மானியத்தில் மெட்டாரைஸ்யம் பச்சை பூஞ்சாளம்
X

ஆலத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு கலைஞர் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சத மானியத்தில் மெட்டாரைஸ்யம் பச்சை பூஞ்சாளத்தை மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகள் மற்றும் தென்னை தாக்கும் வண்டுகளை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவதற்கு மெட்டாரைசியம் எதிர் உயிரி 50% மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதில் கூட்டுப்பண்ணைய திட்டத்தின் கீழ் கூட்டாக பொருள் வாங்கும் முறையில் ஆலத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழு உறுப்பினர்களுக்கு 50% மானியத்தில் மெட்டரிசியம் வழங்கப்பட்டது. முக்கியமாக தென்னையைத் தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அளிப்பதில் அதன் இளம் புழுக்களை மற்றும் அனைத்து கடித்து உண்ணும் பயிர்களை குடையும் புழுக்களை கட்டுப்படுத்துவதில் மெட்டாரைசியம் முக்கிய பங்காற்றுகிறது.

ஒரு எக்டருக்கு நாலு கிலோ மெட்டாரைசியம் பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு கிலோ விலை ரூபாய் 135. எக்டருக்கு முழு விலை 540. 50% மானியத்தில் ரூபாய் 270 க்கு வழங்கப்படுகிறது. உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வழங்கும் விழாவில் ஆலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிமணி திராவிட செல்வன் மற்றும் ஆலத்தூர் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் தங்கராசு கலந்து கொண்டு குழு நடவடிக்கைகள் பற்றி எடுத்துக் கூறினார்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி மெட்டாரைசியம் பயன்பாடுகள் பற்றியும் கலைஞர் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் வேளாண் துறை திட்டங்கள் மற்றும் பிற துறை திட்டங்கள் பற்றி விளக்கி கூறினார்.

பொதுவாக விவசாயிகள் வண்டுகள் மற்றும் பயிர்களை குடையும் புழுக்களை கட்டுப்படுத்த ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதோடு நமது உண்ணும் உணவிற்கே மீண்டும் அவைகள் மீள வந்து சேர்கின்றது. இதற்காக நமக்கு கிடைத்த பச்சை பொக்கிஷம் தான் மெட்டாரைசியம். இதை நீருடன் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க முடியும் அல்லது மக்கிய குப்பையுடன் கலந்து பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் விடலாம். காண்டாமிருக வண்டு. தனது முட்டை மற்றும் புழுக்களை தென்னந்தோப்புகளில் அல்லது பசுஞ்சாணங்களை விவசாயிகள் கொட்டி வைத்திருக்கும் இடங்களில் சென்று இடும். மேலாக அரை அடி ஆழத்தில் மட்டும் இவைகள் காணப்படும்.

குப்பை அதிகம் உள்ள இடங்களில் காண்டாமிருக தாக்குதல் உள்ள தென்னங்கன்றுகளுக்கு அருகிலும் ஒரு ஏக்கருக்கு தேவையான 1.5 கிலோ மெட்டாரைசி யத்தை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தளிப்பானில் ஒரு லிட்டர் கரைசல் மற்றும் 9 லிட்டர் தண்ணீர் கலந்து அடிக்கலாம் மேலாக உள்ள வடிகட்டிய கரைசலை மட்டும் அடிக்கவும் கீழே தங்கி இருக்கும் வெள்ளை பொடியானது கைத்தெளிப்பான்களின் நாசிலை அடைத்துக் கொள்ளும். எனவே கவனம் தேவை.

மாவுக்கு ஏழு டாங்க் ஏக்கருக்கு 21 டேங்க் விதம் அடிக்கவும். இதையே ஏக்கருக்கு தேவையான ஒன்றரை கிலோ மெட்டாரைசியத்தினை 50 -60 கிலோ மத்திய குப்பையுடன் கலந்து மரத்துக்கு அருகில் மரத்துக்கு ஒரு கிலோ வீதம் வைக்கலாம். கரையான் புற்று அதிக தொல்லை தரும் இடங்களில் கரையான் புற்றுகளில் இந்த பச்சை பூஞ்சளத்தை மக்கிய குப்பை அல்லது நீருடன் கலந்து பாதிப்புக்கு தக்க ஒரு லிட்டர் வரை ஊற்றிவிடலாம் மூன்று நாட்களுக்குள் இந்த பூஞ்சாலம் அதன் உடல் முழுவதும் போர்வை போல சுற்றிக் கொள்ளும். பூச்சி வண்டு மற்றும் இளம் புழுக்கள் இறந்து விடும்.

இந்த பூச்சியின் மீது படும் பிற பூச்சிகளும் மெட்டாரசியத்தினால் பாதிக்கப்பட்டு இறந்துவிடும் கரையான் காலனிகளில் ஒன்றை ஒன்று தொட்டுக் கொள்ளும் பழக்கம் உள்ளதால் மிக விரைவாக இந்த பூஞ்சை பரவி முழு காலனியும் அழிக்கப்படுகிறது. கரையான் புற்றுகளில் மக்கிய குப்பையுடன் கலந்து போடுவதை விட கார்டு போர்டு பழைய பேப்பர்கள் கலவையுடன் சேர்ந்து இடும் பொழுது கரையான்கள் விரைவாக இதன் மூலம் கவரப்பட்டு விரைவில் கொல்லப்படுகின்றன.

எனவே விவசாயிகள் மதுக்கூர் வேளாண் விரிவாக்கம் மையத்தின் மூலம் வழங்கப்படும் மெட்டாரசியத்தினை 50% மானியத்தில் பெற்று இயற்கை முறையில் கட்டுப்படுத்திட வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆலத்தூர் வேளாண் உதவி அலுவலர் சுரேஷ் செய்திருந்தார். துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி விவசாயிகளுக்கு பல்வேறு பயிர்களில் எவ்வாறு மெட்டரைசியம் பயன்படுகிறது என்பதனை விளக்கி கூறினார்.

Updated On: 5 Dec 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!