/* */

கும்பகோணத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்

தஞ்சை மாவட்டம் கும்பகோணததில் இளம் பெண்ஞுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் தேடிவருகின்றனர்.

HIGHLIGHTS

கும்பகோணத்தில்  பெண்ணுக்கு பாலியல் தொல்லை ஆட்டோ டிரைவரை தேடுது போலீஸ்
X

கோப்பு புகைப்படம்

கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்தவர் ஹசன். இவரது மனைவி சபீனாபானு(28). ஹசன் சவுதி அரேபியா நாட்டில் வேலை பார்த்து வருகிறார். சபீனாபானு தன் குழந்தைகள், மாமியாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் குழந்தைகளை பள்ளிக்கு ஆட்டோவில் அனுப்பும் போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் என்பவருடன் சபீனாபானுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதை பயன்படுத்திக் கொண்ட அசாருதீன் சபீனாபானுவோடு செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதைக்காட்டி அசாருதீன் மிரட்டி அவ்வப்போது பாலியல் தொல்லை கொடுப்பதாக கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்தில் சபீனாபானு புகார் அளித்துள்ளார்.

இதற்கிடையில், மேலக்காவேரி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் முன்னாள் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கும்பகோணம் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர்.

அதில், மேலக்காவேரியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் அசாருதீன் மற்றும் அவரது நண்பர்களும் சேர்ந்து, மேலக்காவேரி பகுதியில் உள்ள சில பெண்களை பணத்துக்காக இணையதளம் மூலம் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியுள்ளதாகவும்.

இந்த செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாக விசாரித்து கைது செய்து, பாதிக்கப்பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர் இதுதொடர்பாக கும்பகோணம் டிஎஸ்பி பாலகிருஷ்ணன், கிழக்கு காவல் நிலைய போலீஸார் விசாரித்து அசாருதீனை தேடி வருகின்றனர்.

Updated On: 23 May 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...