/* */

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

கும்பகோணத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

தஞ்சை வடக்கு மாவட்ட அதிமுக  செயலாளர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.

கும்பகோணம் பொற்றாமரைக்குளம் பகுதியில், அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா தாராசுரம் பேருந்து நிலையத்தில், பகுதி அதிமுக செயலாளரும் மாநகராட்சி கவுன்சிலருமான வழக்கறிஞர் குமரேசன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பகுதி நிர்வாகிகள் பொன்னையன், கௌரிசங்கர், சாரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக தஞ்சை வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.ஜி.எம். சுப்பிரமணியன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர், தர்பூசணி, வெள்ளரிக்காய், இளநீர் ஆகியவற்றை பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் ராம்குமார், கண்ணபிரான், பகுதி செயலாளர்கள் சேகர், ராமநாதன், ராஜி, ஒன்றிய செயலாளர்கள் சோழபுரம் அறிவழகன், செந்தில், திருவையாறு நீலகண்டன், மாநில நிர்வாகிகள் லெனின், பாண்டியன் கோவி. கேசவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 May 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தீயவன் என்று அறிந்தால் ஒதுங்கிவிடு..!
  2. ஈரோடு
    ஈரோட்டில் இன்று 107.6 டிகிரி வெயில் பதிவு
  3. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  4. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  5. உலகம்
    ஆஸ்திரேலிய நாட்டின் கடற்கரையில் நூற்றுக்கணக்கில் ஒதுங்கிய...
  6. இந்தியா
    ஜார்கண்ட் இடைத்தேர்தலில் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் போட்டி
  7. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  8. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  9. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  10. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...