/* */

மது கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்

கடையம் அருகே அடைக்கப்பட்ட அரசு மதுபான கடையை மீண்டும் திறக்க கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

மது கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
X

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மதுக்கடை முன்பு போராட்டம் நடத்திய கிராம மக்கள்.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அடைக்கப்பட்ட அரசு மதுபான கடையை மீண்டும் திறக்கக் கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டம் நடத்தினர்.

தமிழக அரசு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் விரைவில் படிப்படியாக மது கடைகள் குறைக்கப்பட்டு பூரண மதுவிலக்கு திட்டத்தை கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிப்பு செய்திருந்தது. அதன் அடிப்படையில் வருவாய் குறைந்த மதுக்கடைகள், 50 மீட்டருக்குள் அருகருகே இருக்கும் மதுக்கடைகள் ஆகியவற்றை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே வெய்க்கால்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடை சில தினங்கள் முன்பு அடைக்கப்பட்டது. மது கடை குறைப்பு திட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டதாக தகவல் பரவியதால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ள நிலையில் இன்று மதுக்கடையை திறப்பதாக தகவல் பரவியது.

இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் திரண்டு அடைக்கப்பட்ட மதுக்கடையை திறந்தால் வெய்க்கால்பட்டி மது கடை முன்பு திரண்டு போராட்டம் நடத்த போவதாக அறிவித்து மதுக்கடை முன்பு கூடி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Updated On: 28 April 2023 8:22 AM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  2. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  3. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  4. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  5. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  8. வீடியோ
    Ameer-ன் படம் பார்க்க Annamalai-யை அழைத்தோம் !#annamalai #annamalaibjp...
  9. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...