/* */

டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி? குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்

தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்சியர் அனுமதி அளித்ததாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

HIGHLIGHTS

டிச.20 முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி? குழப்பத்தில் சுற்றுலா பயணிகள்
X

தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் டிச.20ஆம் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகள், சுற்றுலா தலங்களுக்கு செல்ல ஆட்சியர் அனுமதி அளித்ததாக சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.


அதில் பேரருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி. ஐந்தருவியில் ஒரே நேரத்தில் 10 ஆண்கள் மற்றும் 10 பெண்கள் குளிக்க அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. பழைய குற்றால அருவியில் ஒரே நேரத்தில் 5 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் குளிக்க அனுமதி. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக பின்பற்ற மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அந்த அறிக்கையில் மாவட்ட ஆட்சியரின் கையொப்பம் பெறப்படவில்லை. மேலும் இதுதொடர்பாக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் இருந்து எந்த ஒரு முறையான தகவலும் வெளியிடப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Updated On: 7 Dec 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  5. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  6. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  7. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  8. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  9. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  10. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!