/* */

ஆக்கிரமிப்பு: தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகை

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

HIGHLIGHTS

ஆக்கிரமிப்பு: தென்காசி நகராட்சி அலுவலகத்தை  வியாபாரிகள் முற்றுகை
X

தென்காசி நகராட்சி அலுவலகத்தை வியாபாரிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தென்காசி நகராட்சி பகுதிகளில் 2 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வியாபாரிகள் உள்ளனர். இந்த கடை வீதிகளில் நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு இன்று அகற்றப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இதனையடுத்து இன்று தென்காசி வியாபாரிகள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். முற்றுகையின் போது இரண்டு ஆண்டு காலமாக கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் சுற்றுலா பயணிகளின் வருகை நிறைந்து காணப்படுகிறது.

இந்த சமயத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக நகராட்சி அறிவித்துள்ளது. தொடர்ந்து தென்காசி வியாபாரிகள் காவல்துறையினர்க்கும், நகராட்சிக்கும் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு மூன்று மாத கால அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

Updated On: 24 May 2022 3:57 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?