Begin typing your search above and press return to search.
குற்றால அருவிக்கரையில் எம்.எல்.ஏ ஆய்வு
குற்றாலம் அருவிக்கரை பகுதியில், எம்.எல்.ஏ பழனி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
HIGHLIGHTS
சில மாதங்களுக்கு முன், குற்றாலம் மெயின் அருவி பகுதியில், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது, தடாகத்தில் விழுந்து தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த தடாகம் பகுதியை சீரமைக்க வேண்டும் என்று தென்காசி எம்.எல்.ஏ பழனி, சுற்றுலாத்துறை அமைச்சருக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார். இதையடுத்து, சுற்றுலாத்துறை சார்பில், இதற்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தடாகம் பகுதியை எவ்வாறு சீர்படுத்த வேண்டும் என்று எம்.எல்.ஏ பழனி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வட்டாரத்தலைவர் பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.