Begin typing your search above and press return to search.
தென்காசி: காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு ஒப்படைப்பு
தென்காசி மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
HIGHLIGHTS
செல்போன் தொலைந்தால், கூடவே நிம்மதி தொலையும் காலம் இது. தென்காசி மாவட்டத்தில் 51 நபர்கள் தொலைத்த செல்போன்களின் புகாரின்பேரில், மாவட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ண ராஜ் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் போலீஸ் கூடுதல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன் அறிவுரையின்படி, சைபர் கிரைம் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள் செல்வி, உதவி ஆய்வாளர் செண்பகபிரியா ஆகியோர், அவற்றை கண்டுபிடித்து மீட்டனர்.
தென்காசியில் நேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. நல்லமணி கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு விழிப்புணர்வு உரை ஆற்றியதோடு, செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். காவல்துறையினர் நடவடிக்கையை பலரும் பாராட்டினர்.