Begin typing your search above and press return to search.
சட்டவிரோதமாக மது, கள் விற்ற 9 நபர்கள் கைது
தென்காசி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் மற்றும் கள் விற்பனை செய்த 9 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட எஸ்பி., சுகுணா சிங் உத்தரவின் பேரில் மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 7 நபர்களையும் இதேபோல் கள் விற்பனை செய்த 2 நபர்களையும் ரோந்து பணியில் இருந்த போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 25 மதுபாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது.