/* */

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவக்கம்

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவங்கியது.

HIGHLIGHTS

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவக்கம்
X

குற்றாலம் திருக்கோவிலில் சந்தனாரி தைலம் காய்ச்சும் பணி துவங்கியது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வரலாற்று சிறப்புமிக்க அருள்மிகு திருக்குற்றால நாதசுவாமி - குழல்வாய்மொழி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் பங்குனி, சித்திரை மாதத்தில் ஏற்படும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை திருக்குற்றாலநாத சுவாமிக்கு தீர்க்கும் வகையில் சந்தனாரித் தைலம் தேய்த்து வழிபடுவது வழக்கம்.

இதற்காக கோவிலின் திரிகூட மண்டபத்தில் உள்ள அறையின் அடுப்பில் 2 பெரிய செப்பு பானைகளில் 48 மூலிகைகளைக் கொண்டு 2 மண்டலங்களாக அதாவது 96 நாட்கள் காய்ச்சிய பின்னர் சந்தனாரி தைலம் தயாரிக்கப்பட்டு 96 நாட்களுக்கு பின்னர் திருக்குற்றாலநாத சுவாமிக்கு சந்தனாரி தைலம் தேய்க்கும் வைபவம் நடைபெறும்.

இதற்காக இன்று கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு 2 செப்பு பானைகளில் முதல் நாளான இன்று வெட்டிவேர் போட்டு காய்ச்சும் பணியை கோவில் பட்டர்கள் துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வீரபாண்டி மற்றும் வெளிநாட்டவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு செப்பு பானையில் மூலிகை வேர்களை போட்டு பணியை துவக்கி வைத்தனர்.

Updated On: 31 March 2023 6:48 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு