முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினம்: பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் அனுஷ்டிப்பு
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது படத்திற்கு காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
HIGHLIGHTS
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31-வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல்வேறு கட்சியினர் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்டம் காசி விசுவநாதர் கோயில் அருகே உள்ள காந்தி சிலையின் முன்பு ராஜீவ் காந்தி திருவுருவப்படத்திற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினரும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இதனைத்தொடர்ந்து அவரது தலைமையில் காங்கிரஸ் நகர தலைவர் காதர் மைதீன், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபிக், சுப்பிரமணியன், பூமாதேவி, உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் வன்முறை தீவிர ஒழிப்பு பிரச்சனை உறுதிமொழியும் ஏற்றனர்.