தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வினியோகம்
Free Bicycle -தென்காசியில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை பழனிநாடார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
HIGHLIGHTS
Free Bicycle -தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு விலை இல்லா மிதிவண்டி வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி வீரமாமுனிவர் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகர மன்ற தலைவர் சாதிர் தலைமை தாங்கினார். தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட காங்கிரஸ் தலைவருமான பழனி நாடார் கலந்து கொண்டு இலவச மிதிவண்டி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அவர் தமிழக அரசு மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. காமராஜர் மாணவர்களுக்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல் நமது தமிழக முதல்வர் ஊட்டச்சத்து திட்டத்தை தற்போது தொடங்கி உள்ளார். காலை மற்றும் மாலை பள்ளி நேரங்களில் பேருந்து வசதிகள் வேண்டுமென பள்ளி சார்பில் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக போக்குவரத்து பணிமனை மேலாளரிடம் தெரிவித்துள்ளோம். போதிய பணியாளர்கள் இல்லாததால் தற்போது பேருந்து இயக்க இயலாது இன்னும் சில நாட்களில் ஆட்களை நியமித்து பேருந்து இயக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். விரைவில் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உதயகிருஷ்ணன் நகர காங்கிரஸ் தலைவர் காதர் மைதீன், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரபிக், பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், திமுக பொருளாளர் சேக் பரித், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முருகன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2