/* */

தீபாவளி சிறப்பு ரயில்: பாவூர்சத்திரத்தில் பயணிகள் வரவேற்பு

தீபாவளி சிறப்பு ரயிலுக்கு பாவூர்சத்திரத்தில் பயணிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

தீபாவளி சிறப்பு ரயில்: பாவூர்சத்திரத்தில் பயணிகள் வரவேற்பு
X

தீபாவளி சிறப்பு ரயிலுக்கு பாவூர்சத்திரத்தில் பயணிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலியிலிருந்து அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம் தென்காசி, விருதுநகர், மதுரை வழியாக சென்னைக்கு சென்ற தீபாவளி சிறப்பு ரயிலுக்கு பாவூர்சத்திரத்தில் பயணிகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் ரயில் டிரைவர்களுக்கு சால்வை அணிவித்தும், மரக்கன்றுகள் மற்றும் புத்தகம் வழங்கியும் வரவேற்றனர்.

இதுகுறித்து முத்துமாலைபுரம் ஊரைச் சேர்ந்த செல்வபிரகாஷ் வயது 30 என்ற பயணி கூறுகையில், தீபாவளிக்கு சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட இந்த ரயில், தொடர்ந்து அனைத்து நாட்களிலும் திருநெல்வேலியிலிருந்து, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி விருதுநகர் வழியாக சென்னைக்கும், அதேபோல் சென்னையில் இருந்து மதுரை, விருதுநகர், தென்காசி, பாவூர்சத்திரம், கடையம், அம்பா சமுத்திரம் வழியாக திருநெல்வேலிக்கும் இயக்கினால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500க்கும் மேற்பட்ட கிராமத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தார்.

இந்த சிறப்பு ரயில் வரவேற்பில் கல்லூரணி பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார், தொழிலதிபர் சேவியர் ராஜன், தளிர் தொண்டு அமைப்பாளர் தங்கராஜ், ரயில் பயணிகள் சங்க ஆலோசகர் பாண்டியராஜன் மற்றும் சுற்றுப் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 Nov 2021 1:53 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  3. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  4. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  6. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  8. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  9. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  10. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு