Begin typing your search above and press return to search.
குற்றாலம் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை அறிவுரைகள்
குற்றாலத்தில் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு காவல்துறை சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களில் ஒன்றான குற்றால அருவிகளில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் காரணத்தினால் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன் தலைமையில் குற்றாலம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோஸ் முன்னிலையில் குற்றாலம் பகுதியில் உள்ள விடுதி உரிமையாளர்களை வரவழைத்து அவர்களிடம் கொரோனா நோய் தொற்றைத் தவிர்க்க குற்றால அருவிகளில் குளிக்க அரசு தடை செய்துள்ளது.
எனவே சுற்றுலா பயணிகளுக்கு தங்குவதற்கு அறைகள் வழங்க வேண்டாம் எனவும், நோய் தொற்றைத் தவிர்க்க காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகள் எனவும் அறிவுரை வழங்கப்பட்டது.