Begin typing your search above and press return to search.
சங்கரன்கோவிலில் விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.
HIGHLIGHTS
சங்கரன்கோவிலில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் உயர்வை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாவட்ட செயலாளர் கனேசன்,மாவட்ட தலைவர் ரெங்கசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர் கருப்பசாமி, மாவட்ட துணைசெயலாளர் முகம்மது யாசின், ஜெயராஜ், முனியசாமி, கற்பகம், பேச்சியம்மாள், இசக்கிதுறை சுடலை கனல்கண்ணன் உள்ளிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.