/* */

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை

மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து காெள்வது குறித்து தீயணைப்புத்துறையினர் ஒத்திகை நிகழ்ச்சி.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் கால மீட்பு ஒத்திகை
X

தீயணைப்புத்துறையினர் சார்பில் உசிலங்குளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.

மழை காலங்களில் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துகொள்ளும் ஒத்திகை நிகழ்ச்சி சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் சார்பில் நடத்தப்பட்டது.

தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் புயல், மழை, வெள்ளம் உட்பட இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்கொத்து கொள்ள எந்த வகையான முறைகளை கையாள வேண்டும் என்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தீயணைப்புத்துறையினர் சார்பில் உசிலங்குளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் வெள்ளம் தண்ணீரில் மூழ்கிய நபரை எப்படி காப்பாற்றுவது என்று கிராமத்தில் உள்ள குளத்தில் தீயணைப்பு வீரர்கள் செய்முறை விளக்கங்களுடன் செய்து காண்பித்தனர்.

சங்கரன்கோவில் பகுதிகளில் ஒவ்வொரு காலகட்டத்திலும் மழை, வெள்ளம், ஆகியவற்றில் இருந்து தன்னுடைய உடைமைகளை எவ்வாறு காப்பாற்றி கொள்வது என்று செயல்முறை விளக்கங்களோடு காண்பித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எனவே பொதுமக்கள் எந்தவித அவசர தேவைக்கும் தீயணைப்புத்துறையின் இலவச தொலைபேசி எண் 100, 101, 112ஆகிய நம்பர்களை பயன்படுத்தி தீயணைப்புத்துறையின் சேவையை பயன்படுத்தி கொள்ள அன்புடன் கேட்டு கொள்கிறேன் என சங்கரன்கோவில் தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் விஜயன் தெரிவித்தார்.

Updated On: 12 Nov 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....