/* */

பெரியார் -அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலூன்ற முடியாது: நாஞ்சில் சம்பத்

பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலுன்றவும் கடை நடத்தவும் முடியாது என்றார் நாஞ்சில் சம்பத்

HIGHLIGHTS

பெரியார் -அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலூன்ற முடியாது: நாஞ்சில் சம்பத்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சியில் பிரசாரம் செய்த நாஞ்சில்சம்பத் 

பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலுன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என்றார் நாஞ்சில் சம்பத் .

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 16வது வார்டு திமுக வேட்பாளர் கருணாநிதி, 15வது வார்டு மதிமுக வேட்பாளர் மணிமாலா, ஆகியோரை ஆதரித்து பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசுகையில் , உள்ளாட்சி தேர்தல் என்பது நாற்றங்கால் அந்த நாற்றங்களை ஒரு கூட்டம் தேர்தலை நடத்தாமலே காலம் கடத்தி சென்றது. உள்ளாட்சி பகுதிகளுக்கு பல்பு வாங்கியதில் 1500 ரூபாய் என கோடி கோடியாய் கொள்ளையடித்த கோவையை சார்ந்த வேலுமணி. தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்ததில் மட்டும் 6000 கோடி ஊழல் செய்த தங்கமணி. வீட்டு வாசலிலே 70 லட்ச ரூபாய் மணலை குவித்து வைத்து கொள்ளை அடித்த வீரமணி என தற்போது இந்த மணிகளின் ஆட்சி முடிவு வந்துள்ளது. இன்றைக்கு அவர்களை பயன்படுத்தி கொண்டு எல்லா இடங்களிலும் செய்கின்ற ராஜதந்திர அரசியலை தமிழகத்திலும் செய்ய முயற்சிக்கின்றனர்.

எந்த கட்சி வலுவாக உள்ளதோ அந்த கட்சியோடு கூட்டணி வைத்துக் கொண்டு ,அந்த கட்சியை தனதாக்கிக் கொள்கிற கபளீகரம் அரசியலை முன்னெடுத்து வருகின்ற காலகட்டத்தில் எங்கே வேண்டுமென்றாலும் காலூன்றாலம் கடை நடத்தலாம் ஆனால் பெரியார் அண்ணா பூமியில் காலூன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என நிரூபிக்க வேண்டிய கடமை எங்களுக்கும் எங்கள் முன்னால் உள்ள மக்களுக்கும் அதை உணர்த்த வேண்டிய உரிமை உள்ளது. பாசிஸ்டுகளின் உடைய பழிக்கு நீங்களும் நானும் பலிகடா ஆகாமல் நாட்டை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.

எல்லா பொதுத்துறை சொத்துகளையும் சூறையாடி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இயல்பையே பாழாக்கி இந்தியாவின் மிக குறைந்த விலைக்கு விற்ககூடிய கூட்டத்தின் பிடியிலிருந்து தேசத்தை காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கோவில்பட்டியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்ற செய்தி கேட்டால் கோவில்பட்டியில் அடிக்கிற அடி, லக்னோவில் இருக்கிற ஆதித்யநாத் கன்னத்தில் விழும் என்பதை மறந்துவிடாதீர்கள்‌.

ஸ்டாலின் பதவி ஏற்ற பின்பு பள்ளத்தாக்கில் கிடந்த தமிழகத்தை சமவெளியில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.எடப்பாடி பழனிசாமி என்னும் எட்டு வழி சாலை பேர்வழியை இந்த நாட்டிலே யார் என்று தெரியாத ஒரு அரசியல் அனாதையை சசிகலா முடிசூட்டி பார்த்து, அந்த சசிகலாவுக்கு துரோகம் செய்து அருந்தமிழ் நாட்டுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டு உரிமையை எல்லாம் கொண்டு போய் அடகு வைத்தார்கள்.எனவே உங்களது வாக்குகள் பாறையில் விதைத்து பலனின்றி போகாமல் வாக்கு அளிக்க வேண்டிய சின்னம் உதய சூரியன் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் ஒன்றியச் செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அழகுமுத்துப்பாண்டியன், மதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மதிமுக மாணவரணி செயலாளர் விநாயக ரமேஷ்,மதிமுக நகரச் செயலாளர் பால்ராஜ், மதிமுக மத்திய பகுதி ஒன்றியச் செயலாளர் சரவணன், உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.

Updated On: 16 Feb 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை தொடர் உயர்வு
  2. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  3. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  4. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  5. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  6. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  8. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  9. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  10. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...