/* */

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 நபர்கள் கைது

ஆட்டோ ஓட்டுனரை தாக்கிய 2 நபர்கள் கைது
X

அச்சம்பட்டியில் ஆட்டோ டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனையூரை சேர்ந்தவர் மாரிசாமி. ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். இவர் அவரது ஆட்டோவில் அச்சம்பட்டி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அச்சம்பட்டி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்கள் மாரிசாமியை வழிமறித்து இந்த வழியாக இனி நீ வரக்கூடாது என அவதூறாக பேசி கைகளால் தாக்கியுள்ளனர்.

மீண்டும் இந்த வழியாக வந்தால் உன்னை எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதுகுறித்து மாரிசாமி சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு அச்சம்பட்டியை சேர்ந்த சண்முகையா என்பவரின் மகன் செல்வகுமார் மற்றும் வேலுசாமி என்பவரின் மகன் மணிகண்டன் ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 16 Jan 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?