Begin typing your search above and press return to search.
கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
பதினாறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 200 கும் மேற்பட்ட கிராமபுற செவிலியர்கள் அரசு மருத்துவமனை முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை முன்பு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரியும், கிராம துணை சுகாதார மையங்களை அம்மா மினி கிளினிக்குகளாக மாற்ற கூடாது எனவும், இ சஞ்சீவினி செயலியை கையாள்வதில் உள்ள சிரமங்களை களைய வேண்டும் என்பது உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர் சங்கத்தினர் 200 கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என்றால் கோட்டையை நோக்கி பேரணியாக செல்லவிருப்பதாகவும் தெரிவித்தனர்.