/* */

சொக்கம்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது

சொக்கம்பட்டியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சொக்கம்பட்டி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
X

பைல் படம்.

தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்டது காந்தி திருமண மண்டபம். இந்த மண்டபத்தின் எதிரில் சுப்பையா பாண்டியன் என்பவர் கடந்த 20 ம் தேதி அவரது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது காணமானல் போனது. இதுகுறித்து காவல் நிலையத்தில் சுப்பையா பாண்டியன் புகார் அளித்திருந்தார்.

இதேபோல், கடந்த 22 ம் தேதி சொக்கம்பட்டியில் வசித்து வரும் திருமலைக்குமார் மற்றும் சின்னத்துரை ஆகியோரின் பலசரக்கு கடைகளின் கதவை உடைத்து உள்ளே இருந்த பணம் திருடி விட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது சொக்கம்பட்டி தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் கணேசன்(19) என்பது தெரிய வந்தது.

இதனையடுத்து, செல்வம் மீது போலீசார் வழக்குப்பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Updated On: 24 Aug 2021 4:42 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!