Begin typing your search above and press return to search.
ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடை புறம்போக்கு தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(48).
இவர் தனது வீட்டின் முன் கட்டி வைத்திருந்த ஆட்டினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாரின் கொடுத்தார்.
அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஆடு திருட்டில் ஈடுபட்டது லட்சுமியாபுரம் நடுத்தெருவை சேர்ந்த வெள்ளபாண்டி என்பவரின் மகன் சங்கிலி மாடசாமி(32) என்பது தெரியவந்தது.
இதுகுறித்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.