/* */

சூடனை சாப்பிட்ட குழந்தை பலி

சூடனை சாப்பிட்ட குழந்தை பலி
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் கிராமத்தை சேர்ந்தவர் யேசுராஜ். வயது 36. ஆலங்குளத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி நிவேதா. தம்பதிக்கு ராஜேஸ்வரி என்ற ஒன்றரை வயது குழந்தை உள்ளது. கடந்த 18ம் தேதி இரவு நிவேதா தன் மகளுக்கு திருஷ்டிக்காக சூடம் தடவி உள்ளார். அப்போது குழந்தை அழுது கொண்டிருந்ததால் சூடம் டம்பாவை அவர் குழந்தைக்கு விளையாட கொடுத்ததாக கூறப்படுகிறது. தாய் நிவேதா வீட்டின் முற்றத்தில் சூடத்தை கொளுத்தி விட்டு வீட்டிற்குள் வருதற்குள் குழந்தை சூடம் டப்பாவை திறந்து சூடம் வில்லைகளை கையில் எடுத்து விழுங்கியுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த தாய் அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். பின்னர் சிசிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த குழந்தை ராஜேஷ்வரி சிகிச்சை பலனின்றி இறந்தது.இது குறித்து ஆலங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறார்கள். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Updated On: 25 Jan 2021 6:30 PM GMT

Related News

Latest News

  1. மேலூர்
    மதுரை மக்களிடம் விடைபெற்று பூப்பல்லக்கில் மலைக்கு புறப்பட்டார்...
  2. லைஃப்ஸ்டைல்
    நிறம் மாறும் மனிதர்கள்..! ஆபத்தானவர்கள்..!
  3. திருவள்ளூர்
    கோடை வெயிலின் காரணமாக 25 அடியாக குறைந்த பூண்டி நீர்த்தேக்க நீர்மட்டம்
  4. திருப்பரங்குன்றம்
    பாஜக வின் பி டீம் தேர்தல் ஆணையம்: மாணிக்கம் தாகூர் எம்பி...
  5. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  6. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  7. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  9. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  10. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்