/* */

மானாமதுரை- மதுரை இடையே புதிய மின் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் முக்கிய சந்திப்பான மானாமதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் பாதையை ஆய்வு செய்தார்

HIGHLIGHTS

மானாமதுரை- மதுரை இடையே புதிய மின் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு
X

மானாமதுரை-மதுரை இடையிலான மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதையில் ரயிலை இயக்கி ஆய்வு செய்யப்பட்டது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை- மதுரை இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின் பாதையில் ஞாயிற்றுக்கிழமை மின்சார ரயிலை இயக்கி ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு நடத்தினார்.

மதுரை- ராமேஸ்வரம் இடையே ரயில்பாதை மின் பாதையாக மாற்றும் திட்டத்தில் தற்போது மதுரை- உச்சிப்புளி வரை ரயில் பாதையை மின்மயமாக்கல பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளது. இதையடுத்து ரயில்வே தலைமை பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் புறப்பட்டு, கீழ்மதுரை, சிலைமான், திருப்புவனம், திருப்பாச்சேத்தி ஆகிய இடங்களில் ரயிலை நிறுத்தி மின் பாதையை ஆய்வு செய்தார்.

அதன்பின் பிற்பகல் 1 .30 மணிக்கு பாதுகாப்பு ஆணையர் வந்த ரயில் மானாமதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்தது. அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் முக்கிய சந்திப்பான மானாமதுரை ரயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் பாதையை ஆய்வு செய்தார். பின்னர் மானாமதுரை ரயில் நிலையத்திலிருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் ஏறி மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார்.

மின்சார ரயில் மானாமதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் போது என்ஜின் சக்கரங்களில் எலுமிச்சை பழங்கள் வைக்கப்பட்டது. மானாமதுரை- மதுரை இடையே உள்ள 47 கி.மீ தொலைவுக்கு மின்சார ரயில் பாதையில் மின்சார இன்ஜின் பொருத்தப்பட்ட ரயிலில் சென்றவாறு பாதுகாப்பு ஆணையர் ஏ.கே.ராய் ஆய்வு நடத்தினார். அப்போது, மின்பாதை திட்டத்தில் உள்ள குறைகளை சரி செய்யுமாறு ரயில்வே பொறியாளர்களுக்கு ஆணையர் உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது மதுரை கோட்ட ரயில்வே தலைமை அதிகாரிகள் மற்றும் பொறியாளர்கள் உடனிருந்தனர்

Updated On: 6 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்