/* */

பேத்திகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார்: தாத்தா உட்பட 4 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது

காரைக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து பேத்திகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த தாத்தா மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

பேத்திகளுக்கு பாலியல் துன்புறுத்தல் புகார்:  தாத்தா உட்பட 4 பேர் போக்ஸோ சட்டத்தில் கைது
X

குழந்தைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் மாதிரி படம்.


காரைக்குடி:

காரைக்குடியில் நண்பர்களுடன் சேர்ந்து பேத்திகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த புகாரின் பேரில் தாத்தா மற்றும் ஒரு பெண் உட்பட 4 பேர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் செல்வம்(60). அதே பகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவரது மகளுக்கு திருமணமாகி கணவன் இறந்துவிட்ட நிலையில், அவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு தனியே சென்று விட்டார்.

இந்நிலையில், மகளுக்கு பிறந்த இரண்டு பெண் குழந்தைகள் தாத்தாவிடம் வளர்ந்துள்ளது. தற்போது இரு பெண் குழந்தைகளுக்கும் 11, மற்றும் 12 வயதாகிறது. இந்த பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய தாத்தா செல்வம் தனது பட்டறையில் வேலை பார்த்து வரும் இரண்டு ஊழியர்களுடன் சேர்ந்து கடந்த 2 வருடங்களாக பாலியல் துன்புறுத்தல் செய்துவந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த பெண் குழந்தைகள் தாயாரிடம் கூறியுள்ளது. அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அக் குழந்தைகளின் தாயார் இன்று காலை காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், செல்வத்தை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது.

இதையடுத்து, குழந்தைகள் தாத்தாசெல்வம், அவரது ஊழியர்கள் 2 பேர் மற்றும் உடந்தையாக இருந்த பெண் ஆகிய நான்கு பேரையும் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Updated On: 25 Jun 2021 3:25 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மறைவு ஓராண்டு இறப்பு மேற்கோள்கள்!
  2. கோயம்புத்தூர்
    ரீல்ஸ் மோகத்தால் வெள்ளியங்கிரி மலையை நாடும் இளைஞர்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    2வது மாத திருமண வாழ்த்து மேற்கோள்கள்!
  4. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  5. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  6. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  9. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி ட்ரோன் பறக்கத் தடை