/* */

சேலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது

சேலம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 நபர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்தும், விரட்டிப் பிடித்தும் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சேலத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது
X

சேலம் சிவதாபுரம் ஆண்டிப்பட்டி ஏரி பகுதியில் லட்சக்கணக்கில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெற்று வருவதாக கொண்டலாம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். அப்போதும் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

பின்னர் காவல்துறையினர் வருவதை கண்டு தப்பியோட முயன்றனர். அப்போது காவல்துறையினர் சுற்றி வளைத்தும், விரட்டிப் பிடித்தும் 14 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 96 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சீட்டுகட்டுகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 26 Dec 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு