/* */

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான எஸ்ஐ: 18 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான காவல் உதவி ஆய்வாரின் உடல் 18 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

சேலத்தில் கொரோனாவுக்கு பலியான எஸ்ஐ:  18 குண்டுகள் முழங்க  உடல் தகனம்!
X

இறந்த உதவி ஆய்வாளரின் உடல் 18 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளுக்கு அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர் தீவிரமாக பாடுபட்டு வருகின்றனர். நோய் தடுப்பு பணியில் எதிர்பாராத விதமாக மருத்துவர்களும், காவலர்களும், அரசு அலுவலர்களும் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து பலர் உயிரிழந்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த சம்பத்குமார் (வயது53) என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் கொல்லப்பட்டி பகுதியில் உள்ள இடுகாட்டில் 18 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

இதேபோல சேலம் குரங்குசாவடி பகுதியில் உள்ள போதைபொருள் தடுப்பு காவல்நிலைய ஆய்வாளர் கண்ணன் (வயது 46) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Updated On: 15 May 2021 2:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  2. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  3. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  5. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...
  8. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  9. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  10. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...