/* */

பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பெட்ரோல் விலை உயர்வு - சேலத்தில் இந்திய தொழிற்சங்க மையத்தினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல், விலை உயர்வை கண்டித்து, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில், சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், கேஸ் விலை புதிய உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது. விலை உயர்வை கண்டித்து , பல்வேறு தரப்பினரும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில், பெட்ரோல் டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி, சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன்பு, இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், இன்று நடைபெற்றது.

மாநில அமைப்புக்குழு உறுப்பினர் புவனேஸ்வரி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை திரும்பப் பெறக் கோரியும், மத்திய அரசை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொரோனா கால நிவாரணமாக 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என போராட்டம் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தினர்.

Updated On: 2 July 2021 6:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  2. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  3. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  4. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  5. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  6. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  9. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  10. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...