/* */

சேலத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்

சேலம் மாநகராட்சி 10 ஆவது கோட்டத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக,அதிமுக பெண் வேட்பாளர்கள் இருவரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்

HIGHLIGHTS

சேலத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம்
X

சேலம் மாநகராட்சி 10 ஆவது கோட்டத்தில் ஒரே பெயர் கொண்ட திமுக, அதிமுக பெண் வேட்பாளர்கள்

சேலம் மாநகராட்சியின் 60 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக,அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 10 ஆவது கோட்டத்தில் பாண்டியன் தெரு, புத்து மாரியம்மன் கோவில் தெரு, அண்ணாநகர், தாண்டவன் நகர், சக்தி நகர், செங்கல் அணை ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது. இதில் 9,649 வாக்காளர்களை கொண்டது.

இந்த நிலையில் 10 ஆவது கோட்டத்தில் போட்டியிடும் திமுக அதிமுக வேட்பாளர்கள் இருவரும் ஆர்.சாந்தி என்ற ஒரே பேர் கொண்டவர்களாக உள்ளனர். ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் களத்தில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இரண்டு பிரதான கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெயர் ஒன்றாக இருந்தாலும் எங்களுக்கு சின்னமே முக்கியம் என வேட்பாளர்கள் தெரிவித்தனர் .

Updated On: 4 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!