/* */

சேலத்தில் 11 சவரன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் 11 சவரன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

சேலத்தில் 11 சவரன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

பைல் படம்.

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அங்கம்மாள் காலனியில் நடந்து சென்ற சுகுணா என்பவரிடம் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் 5.5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து கண் இமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர். இதேபோல் சீரங்கபாளையம் பகுதியில் சாலையில் நடந்து சென்ற சாந்தி என்பவரிடம் 5.5 பவுன் தங்க செயினை இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர்.

இவ்விரு சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் பதிவை கொண்டு தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் நடைபெற்ற இந்த செயின் பறிப்பு சம்பவங்கள் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 8 Dec 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  3. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  5. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  7. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  8. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  9. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  10. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்