/* */

சேலத்தில் ஓட்டு எண்ணுவதற்கு ஏற்பாடுகள் தீவிரம்

சேலம் கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் 4 தொகுதி வாக்குகளை எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சேலத்தில் ஓட்டு எண்ணுவதற்கு  ஏற்பாடுகள் தீவிரம்
X

சேலம் கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் 4 தொகுதி வாக்குகளை எண்ணுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் ஓமலூர் சட்டமன்ற தொகுதி, சேலம் வடக்கு, சேலம் மேற்கு ஆகிய தொகுதிகளின் வாக்குகள் சேலம் கருப்பூர் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தை சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து தபால் ஓட்டு எண்ணும் வாக்கு மையத்தையும், கட்டிடங்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

இதனைத்தொடர்ந்து விரிவான தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கூடுதலாக மேட்டூர் சட்டமன்ற தொகுதி வாக்குகளையும் சேலம் அரசு என்ஜினியரிங் கல்லூரியில் வைத்து எண்ணுவதற்கான பரிசீலனையும் மேற்கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ மாறன், சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார், உதவி கமிஷனர் சந்திரசேகர், ஓமலூர் தாசில்தார் அருள்பிரகாசம், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கீதா பிரியா, மாநகராட்சி உதவி ஆணையாளர் சரவணன், சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், சேலம் அரசு என்ஜினியரிங் கல்லூரி நேர்முக உதவியாளர் அறிவழகன் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 7 March 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  3. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  4. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  5. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  6. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  7. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  10. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...