/* */

காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

காடையாம்பட்டி பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
X

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 7 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. பேரூராட்சி தலைவர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற தேர்தலின்போது அதிமுக வார்டு உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். திமுக வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி கவுன்சிலர் குமார் ஆகிய 8 பேரும் வரவில்லை.

போதிய எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் வருகை தராத காரணத்தால் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக, பேரூராட்சி செயல் அலுவலரும் தேர்தல் அலுவலருமான மயில்வாகனன் அறிவித்தார். பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல், ஆணையம் அறிவிக்கும் மற்றொரு தேதியில் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Updated On: 4 March 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!