/* */

ஓமலூர் பகுதிகளில் வாழை இலை அறுவடை பாதிப்பு

ஓமலூர் பகுதிகளில் வாழை இலை அறுவடை பாதிப்பு
X

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டாரத்தில் விவசாயிகள் வாழை அதிகம் பயிரிட்டுள்ளனர். பழம் மற்றும் இழைக்கான வாழைகள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. பூவன், மொந்தன், செவ்வாழை, ரஸ்தாளி, தேன் என பல்வேறு வகையிலான வாழை சாகுபடி செய்து பராமரித்து வருகின்றனர்.

தோட்டங்களில் இருந்து வாழை இலை, வாழைத்தார்களை சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதில் பூவன், மொந்தன் உள்ளிட்ட ரகங்கள் சேலம் மார்க்கெட் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது கொரோனா 2 வது அலை அதிகரிக்க துவங்கியதாலும், நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு கட்டுபாடுகள், உணவகங்களில் கொரோனா காரணமாக பொதுமக்கள் வருகை குறைவாலும், வாழை இலை விற்பனை குறைந்தது. இதனால் வாழை இலை அறுவடை பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மரங்களிலேயே இலைகள் வீணாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 April 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்