Begin typing your search above and press return to search.
டெல்டா பாசனதிற்கு திறக்கப்படும் நீர் 12000 கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீர் 12000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HIGHLIGHTS
மேட்டூர் அணையின் இன்று காலை 9 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 73.67 அடியாகவும், நீர்இருப்பு 35.93 டி.எம்.சியாகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,051 கன அடியிலிருந்தது 9,875 கன அடியாக அதிகரித்துள்ளது.
டெல்டா பாசன தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 7,000 கன அடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர், காலை 9 மணியில் இருந்து தற்போது 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.