பொங்கல் பரிசுப்பொருட்கள் தொகுப்பு: அமைச்சர் காந்தி வழங்கினார்
இராணிப்பேட்டை யில் நடந்த பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கும் துவக்க விழாவில் அமைச்சர் காந்தி பயனாளிகளுக்கு தொகுப்புகளை வழங்கினார்
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 3 லட்சத்து 37 ஆயிரத்து 977 அரிசு குடும்ப அட்டைகளுக்கு அரிசி, பருப்பு,வெல்லம் உள்ளிட்ட 20,பொருட்களடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கிடும் துவக்க விழா இராணிப்பேட்டை நவல்பூரில் நடந்தது .
விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமைதாங்கினார். ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்தார் விழாவில் மாநில கைத்தறி மற்றும. துணிநூல்துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பொங்கல் பரிசு பொருட்கள் தொகுப்பு பைகளை பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 614 முழுநேரம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகளில் 380 இலங்கைத் தமிழர்கள் குடும்பம் உட்பட 3 லட்சத்து 37 ஆயிரத்து 977 குடும்பங்களுக்கு தலா ரூ,505க்கான 20பொருட்கள் அடங்கிய தொகுப்பினை பயனாளிகளுக்கு வழங்கும் பணிகள் தொடங்கியது
விழாவில், இறுதியாக மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமேகலை நன்றியுரையாற்றினார்.