வாலாஜா அரசு மருத்துவமனை கழிப்பறையில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த பெண்
வாலாஜாப்பேட்டை அரசு மருத்துவமனை கழிப்பறையில் ஆண்குழந்தையை பெற்றெடுத்த இளம் பெண்ணுக்கு போலீஸார் திருமணத்தை நடத்தி வைத்தனர்.
HIGHLIGHTS
இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த செங்காடு மோட்டூரைச் சேர்ந்த ஜோதிகா(19). படித்து விட்டு வீட்டில் இருந்த அவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியரான உதயகுமார்(21) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு வாய்ப்பு கிடைக்கும் போது இருவரும் தனிமையில் இருந்து வந்துள்ளனர். இதனால், கர்ப்பமான ஜோதிகா உதயகுமாரிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால். உதயகுமார் அதற்கு மறுத்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது .
இதற்கிடையில். ஜோதிகாவின் பெற்றோருக்கு தெரியவந்து கருவைக்கலைக்க முயற்சித்து உள்ளனர். அப்போது ,மருத்துவர்கள் குழந்தை வளர்ச்சியடைந்து விட்டதாக மறுத்து எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், ஜோதிகா, பிரசவ வலி காரணமாக வாலாஜாப்பேட்டை அரசு மாவட்டதலைமை மருத்துவமனைக்கு வந்துள்ளார் அப்போது மருத்துவமனையில் கவனிப்பாரின்றி அங்கேயே தரையில் அமர்ந்து மருத்துவர் வருகைக்காக காத்திருந்தார். வலி , மேலும் அதிகரிக்கவே ஜோதிகா மருத்துவமனை வளாகத்திலுள்ள கழிப்பறைக்குச் சென்று அங்குள்ள பாத்ரூமில் ஆண் குழந்தையைப் பெற்றுள்ளார்.
பின்பு குழந்தையின் தொப்புள்கொடியை அவரது நகத்தாலேயே அறுத்துள்ளார். அதன்காரணமாக ஜோதிகாவிற்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டு அறையிலேயே மயங்கி கிடந்து உள்ளார். அதற்குள் குழந்தை வீறிட்டு அழுதுள்ளது அதைக்கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையையும் மயங்கிக் கிடந்த ஜோதிகாவையும் கண்டு அதிர்ச்சியடைந்து, தாயையும் சேயையும் மீட்டு பிரசவ வார்டிற்கு கொண்டு சென்று சிகிச்சையளித்து காப்பாற்றினர்.
மேலும், விபரம் அறிந்த மருத்துவர்கள் வாலாஜா போலீஸாருக்கு தகவல் அளித்தனர் . அதன்பேரில் அங்கு வந்த போலீஸார் விசாரித்து உதயகுமாரை வரவழைத்து இரவிலேயே மருத்துவ வளாகத்திலுள்ள கோயிலில் ஜோதிகா-உதயகுமார் இருவருக்கும் திருமணத்தை நடத்தினர்