/* */

கள் இறக்கி விற்க அனுமதி கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம்

ஆற்காடு அருகே, கள் இறக்கி விற்க அரசு அனுமதிக்க கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கள் இறக்கி விற்க அனுமதி கோரி தலைகீழாக நின்று நூதன ஆர்ப்பாட்டம்
X

கள் இறக்க அனுமதி கேட்டு, தலைகீழாக சிரசாசனம் செய்து போராட்டம் நடைபெற்றது. 

தமிழகத்தில் கள் இறக்கும் தொழிலாளர்கள், பனங்கள்ளை இறக்கி விற்க அனுமதிக்க வேண்டும் எனவும், கள்ளை உணவுப்பொருளாக அனுமதிக்க வேண்டும் எனவும், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்காக, கள் இயக்க சங்கத்தின் மாநிலத்தலைவர் நல்லசாமி தலைமையில் பல்வேறு போராட்டங்களை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் கன்னிகாபுரம் கூட்ரோடில் பொன்னமங்கலம், சொரையூர், சேராப்பட்டு, கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த கள் இறக்கும் தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், கள் இறக்க அரசு அனுமதி வழங்கக் கோரியும், கள்ளை உணவுப்பொருளாக அறிவிக்க வேண்டியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கள் இறக்கும் தொழிலாளி ஒருவர், தலைகீழாக நின்று கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் சிறுவர்களுக்கு கள்ளை ஊற்றித்தந்து குடிக்கச் செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 23 Jan 2022 12:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  5. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  9. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  10. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்