/* */

அரக்கோணத்தில் விஷப்பூச்சி கடித்து கூலித்தொழிலாளி திடீர் மரணம்

அரக்கோணம் அடுத்த சோகனூரைச் சேர்ந்த கூலித்தோழிலாளி திடீர் மரணமடைந்தது குறிந்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

HIGHLIGHTS

அரக்கோணத்தில் விஷப்பூச்சி கடித்து கூலித்தொழிலாளி திடீர் மரணம்
X

ராணிப்பேட்டை மாவட்டம் ,அரக்கோணம் அடுத்தச் சோகனூரைச் சேர்ந்தவர் ராகவன் (45) கூலி வேலை செய்து வந்தார். இவர், தனது ஆடுகளுக்கு தழை மற்றும் இலைகளை மரங்களிலிருந்து பறித்து கொண்டிருந்தார். அப்போது அவரை விஷப்பூச்சி கடித்ததாக தெரிகிறது. ஆனால் அதையறியாத ராகவன் வீட்டிற்கு வந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு திருத்தணியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர் ராகவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து புகாரின் பேரில் அரக்கோணம் தாலூகா போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Aug 2021 7:38 AM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. வானிலை
    தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி? இதோ சில...
  7. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  8. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  9. தமிழ்நாடு
    சதுப்பு நிலம் அடையாளம் காணும் பணி துவக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்...
  10. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!