Begin typing your search above and press return to search.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழு
திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர்மீட்புப் படையினர் 20 பேர் கொண்ட குழு விரைந்தது
HIGHLIGHTS
தமிழகத்தில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம்,மற்றும் இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. .
அதன் அடிப்படையில் மேற்படி மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியனிலிருந்து மீட்புப்படை குழுவினரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டது.
.அதன்பேரில் 20பேர்கொண்ட மீட்பு படைக்குழு தங்கள் மீட்பு பணியின் பொது பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தற்கு விரைந்தனர்.