/* */

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது: சீமான் பேச்சு..

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது என அரக்கோணத்தில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையில் சீமான் பேச்சு

HIGHLIGHTS

தமிழகத்தில் தாமரை மலரவே மலராது: சீமான் பேச்சு..
X

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிடுகிறது. இரண்டாவது கட்ட பரப்புரையாக அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில் திருவள்ளூர் மாவட்ட திருத்தணி தொகுதி வேட்பாளர் அகிலா மற்றும் அரக்கோணம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அபிராமி ஆகியோரை ஆதரித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசுகையில். குழந்தைகளை பெற்று எங்கள் கையில் கொடுங்கள் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்தும் இலவசமாக கற்பித்து நாங்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம்...

பிரதமர் மோடி முகத்தில் தாடி வளருமே தவிர தமிழகத்தில் தாமரை மலர வாய்ப்பு இல்லை..

ஒருவேளை நாங்கள் ஆட்சி கட்டிலில் அமர்ந்தோம் என்றால் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் அரசு மருத்துவமனையை மட்டுமே நாடவேண்டும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்படும். தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத மாநிலமாக உருவாக்கப்படும். தமிழக மக்களுக்கு இலவசமாக வீடு தேடி குடிநீர் வழங்கப்படும். குடிநீர் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது அந்நிய நாட்டு குளிர்பானங்களும் தமிழகத்தில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என பேசினார்.

Updated On: 10 March 2021 6:49 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்