Begin typing your search above and press return to search.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைப்பு
இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
நாட்டின் 5-வது சுதந்திர தினத்தையொட்டி இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.
அறம் விழுதுகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முஹம்மது சலாஹீதீன் ஏற்பாட்டில் கோட்டப் பொறியாளர் சந்திரன் தலைமையில் 75-மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டது.
புங்கை, வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி கோட்டப்பொறியாளர் பிரேமானந்த், உதவி பொறியாளர் முருகானந்தம், சாலை ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.