/* */

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மைய சென்சார் உடைப்பு: ஒருவர் கைது

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மையத்தில் சென்சாரை நொறுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மைய சென்சார் உடைப்பு: ஒருவர் கைது
X

ராமநாதபுரம் கள்ளர் தெரு சந்திப்பில் உள்ள தனியார் வங்கி ஏடிஎம் மையம்.

ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மையத்தில் சென்சாரை நொறுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் கள்ளர் தெரு சந்திப்பில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு அலாரம் ஒலித்தது. இதையடுத்து வங்கி தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்கி பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவி உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

போலீசாரின் துரித விசாரணையில், மது போதையில் ஒருவர் அங்கு சுற்றியது தெரிந்தது. இதன்படி கள்ளர் தெரு ரோஸ் நகரில் வசிக்கும் ஆர்எஸ் மங்கலம் அருகே சனவெளி செட்டியகோட்டையைச் சரவணனை கைது செய்தனர்.

விசாரணையில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவியை தெரியாமல் உடைத்ததால் எச்சரிக்கை மணி ஒலித்த அச்சத்தால் அங்கிருந்து ஓடி விட்டதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 15 Dec 2021 11:49 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  6. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  7. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  8. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  10. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்