ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மைய சென்சார் உடைப்பு: ஒருவர் கைது
ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மையத்தில் சென்சாரை நொறுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
ராமநாதபுரத்தில் மது போதையில் ஏடிஎம் மையத்தில் சென்சாரை நொறுக்கிய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் கள்ளர் தெரு சந்திப்பில் தனியார் வங்கி ஏடிஎம் மையம் உள்ளது. இன்று அதிகாலை இங்கு அலாரம் ஒலித்தது. இதையடுத்து வங்கி தரப்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வங்கி பணியாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவி உடைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
போலீசாரின் துரித விசாரணையில், மது போதையில் ஒருவர் அங்கு சுற்றியது தெரிந்தது. இதன்படி கள்ளர் தெரு ரோஸ் நகரில் வசிக்கும் ஆர்எஸ் மங்கலம் அருகே சனவெளி செட்டியகோட்டையைச் சரவணனை கைது செய்தனர்.
விசாரணையில் சுவரில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் கருவியை தெரியாமல் உடைத்ததால் எச்சரிக்கை மணி ஒலித்த அச்சத்தால் அங்கிருந்து ஓடி விட்டதாக தெரிவித்தார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.