/* */

இராமநாதபுரம் விமானப்படை அதிகாரி கொலை வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை

இராமநாதபுரத்தில் விமானப்படை முன்னாள் அதிகாரி கொலையான வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

HIGHLIGHTS

இராமநாதபுரம் விமானப்படை அதிகாரி கொலை வழக்கு. 3 பேருக்கு ஆயுள் தண்டனை
X

ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட மூவர்.

இராமநாதபுரம் மகா சக்தி நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 64. விமானப் படை அதிகாரியாக பணியாற்றி ஓய்வுக்கு பின் வங்கியில் காசாளராக பணியாற்றினார். இவரது மகன் அபிஷே. இராமநாதபுரம் பட்டணம்காத்தான் பிருந்தாவன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வீராச்சாமி. இவரது மகள் பவானி. இருவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக அபிஷே, பவானி பிரிந்து வாழ்ந்தனர்.

இந்நிலையில் பவானி, கணவரை பிரிந்து வாழ சந்திரசேகர் தான் காரணம் என வீராசாமி கருதினார். இதனைத்தொடர்ந்து கடந்த 2017 ஜூலை 28ல் இராமநாதபுரம் டி- பிளாக் பகுதியில் சந்திரசேகர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காரில் வந்திறங்கிய வீராசாமி உள்பட 3 பேர், சந்திரசேகரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணையில், வீராசாமி 55, வாலாந்தரவை நடராஜன் மகன் அருண்குமார் 25, சடையன்வலசை ஆனந்தன் மகன் அருண் பிரகாஷ் 24 ஆகியோர் இக்கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. இந்த வழக்கு விசாரணை இராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் குற்றவாளிகளான வீராசாமி, அருண்குமார், அருண் பிரகாஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.11 ஆயிரம் அபராதமும், அபராத தொகை கட்ட தவறினால் மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Updated On: 23 Sep 2021 1:05 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!