Begin typing your search above and press return to search.
அரசு பள்ளிகட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது..!
முதுகுளத்தூர் அருகே, அரசு நடுநிலை பள்ளியின் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது.
HIGHLIGHTS

முதுகுளத்தூர் அருகே ஆனைசேரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியின் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது ஆனைசேரி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 36 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் சென்ற பிறகு மாலை ஆறு மணி அளவில் பள்ளியின் பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் பயனில்லாத பொருட்களை வைத்திருக்கும் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பள்ளி ஆசிரியர்கள் மேற்கூரை விழுந்ததை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேற்கூரை மாலை விழுந்ததால் மாணவர்களுக்கோ, ஆசிரியருக்கோ எவ்வித காயமும் இல்லை. பயன்பாடு இல்லாத கட்டிடம் என்பதால் தற்போதும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.