/* */

பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது.

HIGHLIGHTS

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி கிராமத்தில் ஆண்டு தோறும் அறுவடை முடிந்த பின்பு தாழ்பாய் கண்மாயில் உள்ள மீன்களை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடிப்பது, மீன் பிடி திருவிழாவாக கொண்டாடப்படுவது வழக்கம்

அந்த வகையில் கடந்த 7ஆண்டுகளாக சரியாக மழை பெய்யாத நிலையில் கடந்த ஆண்டு பெய்த மழையில் கண்மாய் ஓரளவுக்கு பெருகி விவசாயிகள் விவசாயம் செய்துவந்தனர்.

கடந்த மாதம் அறுவடை முடிந்த நிலையில் பாரம்பரியமிக்க மீன்பிடித் திருவிழாவானது நடந்தது பொன்னமராவதி அருகே பி.உசிலம்பட்டி தாழ்பாய் கண்மாயில் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் மீன்பிடி உபகரணங்கள் வலை, ஊத்தா, கச்சா, சேலை உள்ளிட்டவை வைத்து சிலேப்பி, கட்லா, விரால், குரவை, கெழுத்தி வகை மீன்களை பிடித்தனர்.

இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதியான பொன்னமராவதி, தொட்டியம்பட்டி, கட்டையாண்டிபட்டி, மயிலாப்பூர், பரியாமருதுபட்டி, நெற்குப்பை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர்.

Updated On: 23 April 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  2. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  4. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  5. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  6. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  7. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  8. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  9. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...