புதுக்கோட்டை காங்கிரஸ் சார்பில் முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி
காங்கிரஸ் கட்சி சார்பில் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைகளின் தளபதி பிபின்ராவத்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
HIGHLIGHTS
இந்தியாவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டரில் குன்னூர் அருகே செல்லும் பொழுது ஹெலிகாப்டர் திடீரென தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியது.
இதில் பயணம் செய்த இந்தியவின் முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்ளிட்ட 11 ராணுவ வீரர்கள் உடல் கருகி பலியானார்கள். ஒருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவையே உலுக்கிய இந்த துயர சம்பவம் நடந்தது அடுத்து, நாடு முழுவதும் இன்று பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இன்று அண்ணா சிலை அருகே புதுக்கோட்டை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் முருகேசன், நகர தலைவர் இப்ராகிம் பாபு தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய மாணவர் சங்கம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் சார்பில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி கருப்பு பேட்ஜ் அணிந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், ஆரோக்கியசாமி, குட்லக் மீரா, தனபதி, உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.