தேமுதிகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தவருக்கு நகரச் செயலாளர் பதவி
நியமனக்கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்ட மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. கணேசன் வழங்கினார்
HIGHLIGHTS
தேமுதிக கட்சியிலிருந்து விலகி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த செல்வராஜுக்கு இன்று நகர செயலாளர் பதவி.கிடைத்துள்ளது.
புதுக்கோட்டை நகராட்சிக்குள்பட்ட உசிலங்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்.இவர் 33 வது வார்டு தேமுதிக வட்டச் செயலாளராக செயலாற்றி வந்தார். இந்நிலையில், செல்வராஜ் தேமுதிக கட்சியிலிருந்து விலகி நேற்று பாஜக புதுக்கோட்டை மாவட்ட துணைத் தலைவரும், நகராட்சித் தேர்தல் பொறுப்பாளருமான ஏவிசிசி. கணேசன் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இந்நிலையில், தேமுதிக கட்சியில் இருந்து விலகி நேற்று பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த செல்வராஜ் பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்டை நகர செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை பாரதிய ஜனதா கட்சியின் புதுக்கோட்ட மாவட்ட துணைத் தலைவர் ஏவிசிசி. கணேசன் வழங்கினார்.